காரைக்கால், ஜன. 13: காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு 4 நாட்கள் முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை காரை மாவட்ட பெற்றோர் சங்கம், அன்னை தெரசா சமூக சேவை அமைப்பு, தனியார் அக்குபஞ்சர் நிறுவனம், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தின. இதன் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சந்தானசாமி தலைமை தாங்கினார். காரை மாவட்ட பெற்றோர் சங்க தலைவரான அன்னை தெரசா சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சோழசிங்கராயர் முன்னிலை வகித்தார். போலீஸ் எஸ்பி வீரவல்லபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.