செங்கம், ஜன.12: செங்கம் அடுத்த புதுப்பாளையம் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியில் திமுக வேட்பாளர் சுந்தரபாண்டியன் 10 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரமேஷ் 5 வாக்குகள் பெற்றார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சபாநாயகம், பரிமேழலகன் ஆகியோர் சுந்தரபாண்டியன் வெற்றி வெற்றதாக அறிவித்தனர். தொடர்ந்து, மாலை 3 மணிக்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 15 பேரும் அலுவலக அறையில் காத்திருந்தனர். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாலை 6 மணி ஆகியும் வரவில்லை.