தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

புதுச்சேரி, ஜன. 12: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து புதுச்சேரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ரயில் நிலையம் எதிரில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் யூசுப்அலி பேரணியை தொடங்கி வைத்தார். மாநில பேச்சாளர் ரஹ்மத்துல்லாஜ், துணை பொதுச்செயலாளர் அப்துல் கரீம், துணை தலைவர் அப்துல் ரகுமான் மற்றும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷமிட்டு பதாகைகளை ஏந்தி சென்றனர். ரயில் நிலையம் அருகில் புறப்பட்ட இப்பேரணி பல்வேறு சாலைகள் வழியாக தலைமை தபால் நிலையத்தை சென்றடைந்தது. தொடர்ந்து, அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சதாம் நிவாஷ் ஷரீப் நன்றி கூறினார்.

Related Stories: