ஒரத்தநாடு, ஜன. 10: ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பணித்தள பொறுப்பாளர் பலியானார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருமங்கலக்கோட்டை மேலையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். மலேசியாவில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி தமிழ்ச்செல்வி (32). திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் 100 நாள் வேலை பட்டியல் தயாரிக்கும் பணிதள பொறுப்பாளராக வேலை செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை தனது ஊரில் உள்ள 100 நாள் வேலைக்கான பட்டியலை ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் சரிபார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.அப்போது அதே ஊரை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி நிர்மலா என்பவர் தானும் ஒரத்தநாடு வருவதாகவும், தன்னையும் அழைத்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து நிர்மலாவை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தமிழ்செல்வி சென்றார்.தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் தெலுங்கன் குடிக்காடு அருகே சென்றபோது இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வி பலியானார்.படுகாயமடைந்த நிர்மலா, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தகவல் கிடைத்தமு் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.