பழநி, ஜன. 9: பழநியில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவிப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்படி ஆண்டுதோறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கிடையே மார்கழி மாதத்தில் பாவை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை தெய்வீக பாசுரங்களில் இருந்து ஒப்புவித்தல் போட்டி, இசை போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 2019-20ம் ஆண்டிற்கான பாவை விழா போட்டிகள் கடந்த ஜன. 3ம் தேதி நடந்தது.