ஓமலூர், ஜன.9: ஓமலூர் அருகே ஆயிரம் ரூபாய் கடனுக்கு ₹5,000 கேட்டு தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டி கும்பல் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஓமலூர் அருகேயுள்ள ஊ.மாரங்கலம் ஊராட்சி பாரப்பட்டியை சேர்ந்தவர் ரவி(40). கூலித்தொழிலாளியான இவரது மனைவி இந்திராமணி(35). இவர்களுக்கு கிருஷ்ணன் என்ற மகனும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இந்திராணி தனது வீட்டு செலவிற்காக அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ₹5 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதில், வட்டியுடன் சேர்த்து ₹4 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, ₹1000 கடன் பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மீதமுள்ள ஆயிரம் பணத்திற்கு, வட்டியுடன் சேர்த்து ₹5 ஆயிரம் தர வேண்டும் என சுரேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு இந்திராணி ஆயிரம் மட்டுமே தன்னால் கொடுக்க முடியும் என கூறியுள்ளார்.