மீன்பாசி ஏலம் எடுப்பதில் மோதல் விவசாயிக்கு கொலை மிரட்டல்

நாங்குநேரி, ஜன. 9:  நாங்குநேரி அருகே பாணான்குளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், மணிமுத்தாறு பிரதான கால்வாய் 2வது ரீச் பகுதி குளங்களுக்கான மீன்பாசி ஏலம் விடும் பணி நடந்தது. இதில் மறுகால்குறிச்சியை சேர்ந்த விவசாயி அம்பலக்கண்ணு(39) என்பவர் பங்கேற்று ஏலம் கேட்டார். அப்போது களக்காடு அருகே சிங்கிகுளத்தை சேர்ந்த குரளி வானமாமலை என்பவர் அம்பலக்கண்ணுவிடம் ஏலம் கேட்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.  இதில் ஏற்பட்ட மோதலில்  குரளி வானமாமலை, அம்பலக்கண்ணுவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அவரிடம் இருந்து 1000 ரூபாயை பறித்துச் சென்றார். குரளி வானமாமலை மீது மூன்றடைப்பு போலீசில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.  சம்பவம் குறித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்கு பதிந்து தப்பியோடிய குரளி வானமாமலையை தேடி வருகிறார்.

Related Stories: