புதுச்சேரி, ஜன. 9: புதுவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை ரவுடி உள்ளிட்ட 3 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. புதுவை, உருளையன்பேட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மேற்பார்வையில் எஸ்ஐ வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை கடலூர் ரோட்டில் உள்ள வணிக வளாகம் முன்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற ஒரு வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, போலீசார் அவரை சோதனையிட்டனர். அப்போது கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை உருளையன்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று அதிரடி விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவர் புதுவை, முருங்கப்பாக்கம், வில்லியனூர் மெயின்ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார குடியிருப்பைச் சேர்ந்த தெய்வநாயகம் (21) என்பதும், திருவண்ணாமலை கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருந்தது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.