குன்னூர், ஜன.8:குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை மற்றும் குழந்தைகள் சாப்பிட கூடிய தின்பண்டங்களில் கலப்படம் அதிகம் இருந்ததால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு உதவி பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலையில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்ததாலும் ரசாயன கலவைகள் கலந்திருந்ததாலும் அவை பறிமுதல் செய்யப்பட்டது.