திருப்புத்தூரில் மாடுகள் சண்டையிட்டு டூவீலரில் மோதியதில் படுகாயமடைந்தவர் இறப்பு

திருப்புத்தூர், ஜன. 8: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இரண்டு மாடுகள் சண்டை போட்டுக்கொண்டு ரோட்டில் டூவீலரில் சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். திருப்புத்தூர் செட்டிய தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(52). நேற்று முன்தினம் இரவு சிவகங்கை ரோட்டில் இருந்து டூவீலரில் வந்துள்ளார். அப்போது மீன் மார்க்கெட் அருகே வரும்போது, எதிரில் இரண்டு மாடுகள் சண்டையிட்டு கொண்டு திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்து முட்டி தள்ளியதில் ரொட்டில் கீழே விழுந்த சுப்பிரமணியனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைகாக திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைகாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

Related Stories: