ஆணைக்குட்டப்பட்டி ஊராட்சியில் தலைவர், உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

இளம்பிள்ளை, ஜன.8: வீரபாண்டி ஒன்றியம் ஆணைக்குட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக முருகேசன் பதவியேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து 6 வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன், செல்லப்பன், விஜயா, சுந்தரி, ராஜேந்திரன், யுவராணி உள்ளிட்டோர் பதவியேற்றுக்கொண்டனர். ஆணைக்குட்டப்பட்டி ஊராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் வைரமணி செய்திருந்தார்.

Related Stories: