மதுராந்தகம், ஜன.7: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் தங்க நகை கடன் வட்டி மானியத்தை ரத்து செய்த மத்திய பாஜ அரசை கண்டித்து மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தனசேகர், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் நேரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வாசுதேவன், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.