தஞ்சை ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவர்களின் விவரம்

தஞ்சை, ஜன. 3: தஞ்சை ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று மாலை வரை வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.இதன்படி உமையவள் ஆற்காடு தனலட்சுமி, சீராளூர் செந்தில்குமார், தென்பெரம்பூர் ஜெயராஜவள்ளி, சக்கரசாமந்தம் ராஜேசேகரன், பிள்ளையார்நத்தம் சுரேஷ், பள்ளியேறி சாந்தி, நரசநாயகபுரம் செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல் வடகால் அறிவழகி, திருவேதிகுடி நவரத்தினம், மானாங்கோரை மணிரத்னம், தோட்டக்காடு சாந்தி, கூடலூர் ராமச்சந்திரன், மணக்கரம்பை ஹேமா, ராஜேந்திரம் மணிவண்ணன், வண்ணாரப்பேட்டை ராஜேந்திரன், கடகடப்பை சேவியர், ராமாபுரம் அன்புசித்ரா, தண்டாங்கோரை கலைச்செல்வி, நல்லிச்சேரி அமுதா, கொண்டவிட்டான்திடல் அய்யப்பன், மாத்தூர் மேற்கு இந்துஜா, திட்டை அன்பழகன் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றனர்.

மேலும் ஏற்கனவே நாகத்தி, குருவாடி, குருங்களூர், கல்விராயன்பேட்டை, வாளமரக்கோட்டை, துறையூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories: