வேட்டவலத்தில் புனித சூசையப்பர் 164ம் ஆண்டு பெருவிழா

வேட்டவலம், ஜன.3: வேட்டவலத்தில் புனித சூசையப்பர் திருத்தல 164ம் ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வேட்டவலம் மலையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் திருத்தல 164ம் ஆண்டு பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சூசையப்பர் ஆண்டு பெருவிழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு, வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலய அதிபர் ஜோ.லூர்துசாமி தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தினர்.

விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சூசையப்பர் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை புனித சூசையப்பரின் சிறப்பு ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய வீதிகளின் வழியே நடந்தது.

Related Stories: