அன்னூர், ஜன. 3:அன்னூர் ஒன்றியத்தில் அல்லப்பாளையம், பசூர் ஊராட்சியி–்ல தேர்தல் அதிகாரியை தி.மு.க, அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அன்னூர் கே ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அல்லபாளையம் பஞ்சாயத்து திமுக, அதிமுக இரு தரப்பினரிடையே தேர்தல் முடிவில் சலசலப்பு ஏற்பட்டது. இதில் அல்லபாளையத்தை சேர்ந்த அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட வெங்கிடுபதி 866 வாக்குகள் பெற்றும் எதிராக போட்டியிட்ட ராமசாமி திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட ராமசாமி 855 வாக்குகளும் பெற்று 11 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெங்கிடுபதி வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அதில் தவறு நடந்துள்ளதாக திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் கூறி பதிவான வாக்குகளும், முடிவில் அறிவித்த உள்ள வாக்குகள் சரியாக வரவில்லை, எனக்கூறி முற்றுகையில் ஈடுபட்டனர். மறு வாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி குழந்தைசாமியை முற்றுகையிட்டனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.