ஊட்டி, ஜன. 3: ஊட்டி பாலிடெக்னிக்கில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணும் பணி நடந்தது. மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிக்டெக்னிக் கல்லூரியில் நடந்தது. இங்கு வாக்கு எண்ணும் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 300 பேர் ஈடுபட்டனர். பொதுவாக வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள், உணவு மற்றும் தேநீர் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.