பவானி, ஜன.3: பவானி அருகே தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. பவானி அடுத்துள்ள மைலம்பாடி, செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் மாரியப்பன் (24). அதே பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி நதியா (30). விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ கொளுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனால், மற்ற குடிசைகளுக்கும் தீ பரவியது. இதுகுறித்து, பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்ததோடு, மற்ற குடிசைகளுக்கும் பரவாமல் தடுத்தனர்.