ராஜபாளையம், டிச.31: ராஜபாளையம் அருகே தெருவில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டி பேரூராட்சியின் 13 மற்றும் 14 வது வார்டுக்கு இடைப்பட்டது அந்தோணியார் பள்ளி தெரு. இந்த பகுதியில் நான்கு தெரு சந்திக்கும் இடத்தில் வாறுகால்களில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பல நாட்களாக தெருவின் மத்தியில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கோ, இருசக்கர வாகனங்களில் செல்வதற்கோ மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.