திருப்புத்தூர், டிச.31: உள்ளாட்சி தேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு மக்கள் மிகப்பெரிய பாடத்தை புகட்டும் என முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார்.திருப்புத்தூர் அருகே அரளிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மூன்றரையாண்டு காலமாக ஜனநாயகம் நெரிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல், அதிகாரிகள் மூலமாக நடந்ததால் பல்வேறு நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது. மாநில அரசும், தேர்தல் ஆணையமும், ஏதாவது நொண்டி காரணங்களை சொல்லி தேர்தலை தள்ளிப்போட்டு வந்தார்கள்.