மாநில டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் பதக்கங்களை அள்ளிய மதுரை மாணவர்கள்

மதுரை, டிச. 31: மாநில டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை அள்ளிய மதுரை மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

திண்டுக்கல்லில் மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி கடந்த டிச. 26ம் தேதி முதல் டிச. 29ம் தேதி வரை நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் மதுரையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கு பெற்று 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் வென்றனர். சண்டை பிரிவில் பிரேமா, நவீன் தங்கப்பதக்கம் வென்றனர். ஸ்ரீமுருகன், ரூபேஷ், சில்மியா பானு, ருத்ராதேவி, கீர்த்தனா, மணிகண்டன் வெள்ளிப்பதக்கம் வென்றனர். விஜய் அருணாச்சலம், அப்துல் சமத், சச்சின் வெண்கல பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை மதுரை டேக்வாண்டோ அகாடமி செயலாளர் நாராயணன், உசிலை டேக்வாண்டா கிளப் செயலாளர் யுவராஜா ஆகியோர் பாராட்டினர். உடன் பயிற்சியாளர்கள் ரகுராமன், பிரகாஷ்குமார், பாலமுருகன் இருந்தனர்.

Related Stories: