ஊட்டி, டிச. 31: ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல், கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக ஊட்டி வருகின்றனர். இங்கு வருபவர்கள் காய்கறிகள், பழம் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ஊட்டி மார்க்கெட்டிற்கு வருகின்றனர். மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி இல்லாத நிலையில், எதிரோ உள்ள சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். ஆனால், பெரும்பாலான வியாபாரிகள் தங்களது வாகனங்களை சாலையோர பார்க்கிங்கிங் பகுதியில் நிறுத்தி வந்ததால், அங்கு சுற்றுலா பயணிகளோ அல்லது உள்ளூர் மக்களோ வாகனங்களை நிறுத்த முடியாத நிலை இருந்தது.
இதனால், மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.