ஈத்தாெமாழி,டிச.31: அனந்தநாடார்குடி தூய ஜெரோம் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சார்பில் பல்துறைப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.நிலையான வளர்ச்சி அடைய உலக நாடுகளின் சவால்கள் மற்றும் கருத்துக்கள் குறித்த பல்துறை ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து இக்கருத்தரங்கம் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் தூய பிரான்சிஸ் பல்கலைக்கழக பேராசியர் எம்.செபாஸ்டின் தாமஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முனைவர் ஜோசப் ரூபர்ட் வரவேற்றார். கல்லூரி தாளாளர் அருட்பணி சுவக்கின் தலைமையுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.அமல்ராஜ் துவக்கவுரை ஆற்றினார். ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் லீமாரோஸ் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கின் மைய கருத்தை உதவி பேராசிரியர் ஜெ.சகாயசாபு விளக்கி பேசினார். பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் முனைவர் மோகன்ராஜ் நிலையான வளர்ச்சி அடைய சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் இலக்குகள் குறித்த கருத்துகளை விவாதித்தார்.