காரைக்கால், டிச. 31: .காரைக்கால் அடுத்த கீழமனையில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசு நூற்பாலை மூடப்படுவதும் பின்பு திறக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. அங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நூற்பாலையில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் உள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பல்வேறு காரணங்களை காட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன் நூற்பாலைக்கு (லேஆப்) தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நூற்பாலை மூடப்பட்டிருந்தது. லேஆப் முடிக்கப்பட்டு நேற்று முதல் நூற்பாலை இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது.