பந்தலூர்-உப்பட்டி நெடுஞ்சாலை விரிவாக்கம்

பந்தலூர், டிச.30: பந்தலூர் முனீஷ்வரன் கோயில் முதல் உப்பட்டி, குந்தலாடி, முக்கட்டி வரையுள்ள நெடுஞ்சாலை மேடாகவும் மிகவும் குறுகிய நிலையில் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடமுடியாமல் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்பட்டனர். குறுகிய சாலை என்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. குறுகிய நிலையில் உள்ள நெடுஞ்சாலையை விரிவுப்படுத்தவேண்டும் என இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலையை இருபுறமும் சிமென்ட் கலவை மூலம் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: