கோவை, டிச.30:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளத்தில் மிதக்கும் மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 9 குளங்கள் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மேம்படுத்தப்படுகின்றன. உக்கடம் பெரிய குளத்தின் வடதுபுறம், செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள குளக்கரை பலப்படுத்தப்பட்டு நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பூங்கா, ஓய்வெடுக்கும் பகுதி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
முத்தண்ணன் மற்றும் செல்வம்பதி குளத்தை இணைத்து ஒரே பணியாக 31.25 கோடி ரூபாயிலும், சிங்காநல்லுார் குளத்தில் 12.55 கோடி ரூபாயிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து வாலாங்குளம் செல்லும் பகுதியில் 23.78 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.