ஈரோடு,டிச.30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வட்டார பேரவை கூட்டம் ஈரோடு மாணிக்கம்பாளையம் பாரதி அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொருளாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். மத்திய பா.ஜ. அரசின் மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 8ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் சார்பில் திரளாக கலந்து கொள்வது.