திருவில்லிபுத்தூர், டிச. 30: திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது கொலூர்பட்டி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிலைதடுமாறி வேகமாக வந்து மோதியது. இதில் மின்கம்பம் பலத்த சேதமடைந்தது. அதேபோல மோதிய வேகத்தில் காரும் பலத்த சேதம் அடைந்தது. இது தொடர்பாக நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி மின் கம்பத்தில் மோதிய கார் யாருக்கு சொந்தமானது எந்த பகுதியை சேர்ந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.