உடுமலை,டிச.29:உடுமலை,டிச.29: திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் (27ம் தேதி) நடந்து முடிந்தது. மேலும் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணியாற்றவுள்ள சுமார் 2700 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் வரை தபால் ஓட்டுக்கள் வரவில்லை. இது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது.
இதனையடுத்து நேற்று உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் தபால் ஓட்டுக்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒன்றிய அலுவலகத்தில் குவிந்தனர்.