சேர்ந்தமரம் அருகே ரேஷன் அரிசியை பதுக்கிய 3 பேர் கைது

சுரண்டை, டிச.29:  சேர்ந்தமரம் அருகே  வேலப்பநாடாரூரில் ரேஷன் அரிசி பதுக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சேர்ந்தமரம் அருகே  வேலப்பநாடாரூரில் ரேஷன் அரிசி மற்றும் பருப்புவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் சேர்ந்தமரம் எஸ்.ஐ. தினேஷ்பாபு தலைமையில் போலீசார் வேலப்பநாடாரூரில் சோதனை நடத்தினார். அப்போது அதே ஊரை சேர்ந்த துரைமணி (69), திருக்காவூர் மகன் துரைப்பாண்டி(52) மாரிமுத்து மகன் ஆனந்த்(35) ஆகிய மூவரின் வீட்டில் இருந்தும் 400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 50 கிலோ பருப்பை  போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சேர்ந்தமரம் போலீசார் துரைமணி, துரைப்பாண்டி, ஆனந்த் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: