கடையநல்லூரில் எம்ஜிஆர் நினைவுதினம்

கடையநல்லூர், டிச. 29: எம்ஜிஆரின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு கடையநல்லூரில் அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்து மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மனோகரன் எம்எல்ஏ, மாநில விவசாய அணி ஆனைக்குட்டிபாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் பரணிசங்கரலிங்கம், கண்ணன், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, செங்கோட்டை குட்டியப்பா, அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகன், புகழேந்தி, அப்துல்ஜப்பார், முத்துகிருஷ்ணன், நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரபிரசாத், துணை செயலாளர் வெங்கடநடராஜ், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ஜெயமாலன், துணை செயலாளர் கருப்பையாதாஸ், மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் சிங்காரவேலு, அருண்குமார், அலெக்ஸ், பாபு, சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: