துறையூர் அருகே பைக் மீது பேருந்து மோதி கவரிங் நகை வியாபாரி பலி

துறையூர், டிச.29: துறையூர் அருகே பைக் மீது அரசு பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கவரிங் நகை வியாபாரி பலியானார். துறையூர் காமராஜ் நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜேஷ்கண்ணா (35). இவர் கவரிங் நகைகளை எடுத்து கிராம பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் பைக்கில் வந்து கொண்டு இருந்தார். துறையூர் அடுத்துள்ள கிழக்குவாடி அருகே செல்லும்போது எதிரே வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ்கண்ணா உயிரிழந்தார். தகவலறிந்த துறையூர் போலீசார் ராஜேஷ்கண்ணா உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்துபோன ராஜேஷ்கண்ணாவுக்கு திருமணமாகவில்லை.

Related Stories: