புதுச்சேரி, டிச. 29: புதுவை, அரியாங்குப்பம், பர்கத் நகரில் வசிப்பவர் ஆனந்த் (33), மீனவர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் பார்ட்டி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது மாஜி நண்பரான வீராம்பட்டினம் ஜெயசீலன் என்ற சிவக்குமார் (32) அங்கு இருந்த நிலையில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயசீலன், ஆனந்தை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார், ஜெயசீலன் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.