தென்காசி, டிச.29: தென்காசியில் தீயணைப்பு துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்பு துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கரன்கோவில், தென்காசி தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு நிலைய வீரர்களின் வருகை, தீயணைப்பு வாகன பராமரிப்பு, பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள இரும்பு மற்றும் மரம் அரைக்கும் இயந்திரங்கள், ரப்பர் படகு, தீத்தடுப்பு ஆடைகள், நுரை தெளிப்பான் உள்ளிட்ட நவீன உபகரணங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.