கிருஷ்ணகிரி, டிச.29: கிருஷ்ணகிரி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கட்டிகானப்பள்ளி முன்னாள் தலைவர் சையத் ஏஜாஸ்அகமது மனைவி ரிஹானா அகமது வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்றுதனது சின்னமான மூக்குகண்ணாடிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி திட்டங்கள் பெற்றுத்தரப்படும். அனைத்து பகுதிகளிலும் தார்சாலை அமைத்து தரப்படும். மாணவ, மாணவிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டி தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் டிஜிட்டல் நூலகம் அமைத்து பயன்பெறும் செயல்படுத்தப்படும். பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.