மேட்டூர், டிச.27: கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு, வாக்குப்பெட்டிகளும், அதற்கான உபகரணங்களும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கொண்டு செல்லப்பட்டது.
தமிழகத்தில் இன்று ஊரக பகுதிகளுக்கு முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதில், கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் கொண்டு செல்லப்பட்டன. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலமலை ஊராட்சியில் 3203 வாக்காளர்கள் உள்ளனர். சாலை வசதி இல்லாத இந்த மலைகிராமத்திற்கு, 100 நாள் வேலை திட்டத்தில் கடுமையாக உழைத்து மக்களே சாலை அமைத்துக் கொண்டனர்.