சேலம் சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் செல்போன் பறிமுதல்

சேலம், டிச. 27:  சேலம் மத்திய சிறையில் 900 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசதிபடைத்த கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு சிறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி முருகன் என்பவர் செல்ேபான் பயன்படுத்தி வருவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போனை எடுத்துபோது, சிறை வார்டன்கள் கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறை அதிகாரிகளின் உதவி இல்லாமல் ஆயுள் தண்டனை கைதியிடம் செல்போன் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Related Stories: