திருச்சி, டிச.27: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட மாமியார் வீட்டுக்கு வந்திருந்த ஐ.டி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருச்சி சுப்ரமணியபுரம் அருளானந்தர் கோயில் தெருவை சேர்ந்த மரிகிருதாபுஷ்பம் மகள் ஜெனீபர்(29). இவரும், திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த நவீன் என்பவரும் காதலித்து கடந்த 12-11-14ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பி.இ பட்டதாரிகளான இருவரும் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக ஜெனீபர் குடும்பத்தினருடன் கடந்த 23ம்தேதி மாமியார் வீட்டுக்கு வந்தனர். நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடினர். பின்னர் நவீன் உறவினர் வீட்டுக்கு இனிப்பு கொடுக்க ெசன்றுவிட்டார்.