குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

தஞ்சை, டிச. 27: தஞ்சையில் குண்டர் சட்டத்தின்கீழ் ரவுடி கைது செய்யப்பட்டார். தஞ்சை காமராஜ் மார்க்கெட் வடக்கு ஆஜாரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பாக்கெட் ராஜா (எ) ராஜ்குமார் (38). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையில் ராஜ்குமாரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து பாக்கெட் ராஜா (எ) ராஜ்குமார் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: