வாலிபர் மீது தாக்கு 3 பேருக்கு வலை

திருக்கனூர், டிச. 27: திருக்கனூர் அருகே வி.ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சபரிநாதன் (30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நாகப்பன் என்பவருக்கும் இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.  இந்நிலையில் நேற்று முன்தினம் நாகப்பன், சம்பந்தப்பட்ட இடத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனை சபரிநாதன் தட்டிக்கேட்டபோது நாகப்பன், சுப்பிரமணி, விஜயா ஆகிய 3 பேரும் சேர்ந்து சரமாரியாக அவரை

தாக்கினர். இதுகுறித்து சபரிநாதன், திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், நாகப்பன், சுப்பிரமணி, விஜயா ஆகிய 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிந்து தேடி வருகிறார்.

Related Stories: