விருதுநகர், டிச.22: விருதுநகர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக சுற்றுலாத்துறை மற்றும் மேலாண்மைத்துறை இயக்குநர் அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டு தேர்தல் அலுவலர்களுடன் கூட்டம் டிச.17ல் நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தல் பார்வையாளர் அமுதவல்லி திடீரென மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் செயலளர் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.