நெல்லை, டிச. 22: நெல்லை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்(55). இவர் அப்பகுதியில் பித்தளை பாத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இரவில் இவர் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை பட்டறைக்கு வந்தபோது திறந்திருந்தது. அங்கிருந்த 325 கிலோ பித்தளை பாத்திரங்கள் மற்றும் பித்தளை தகடுகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜலாலுதீன் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வந்தனர்.