புதுக்கோட்டை, டிச.22: புதுகை புதிய பஸ் நிலையத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.