பாகூர். டிச. 19: பாகூர் அருகே காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் மதுபாட்டில் கடத்தலை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுக்கிணங்க தேர்தல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி எல்லை பகுதியான பாகூர் சின்ன ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் பீட் போலீசார் பிரவீன், பாண்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சின்ன ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசார் மீது கார் மோதுவது போல் வந்து வேகமாக சென்றது.