மதுரை, டிச.18: கண்டதேவி கோயில் புதிய தேரின் வெள்ளோட்டம் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸவரர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் இந்த கோயிலில் திருவிழாவையொட்டி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். தற்போது இந்த கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர், வெள்ளோட்டம் பார்க்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்களை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.