மேலூர், டிச. 16: மேலூர் அரிட்டாபட்டி மலையில் மலை ஏறும் பயிற்சி, கோயிலை சுத்தம் செய்தல், பண்டைய கலையை கற்றல் என 3 நிகழ்ச்சிகள் கல்லூரி மாணவர்களால் செய்யப்பட்டது. மதுரை வக்பு வாரிய கல்லூரியில் இருந்து தேசிய மாணவர் படை வீரர்கள் மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி மலையில் மலையேறும் பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இதனை தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் முகுல் மன்கு மற்றும் மேஜர் சையது இப்ராஹிம் துவக்கி வைத்தனர்.