வெளிநாடு வேலைக்கு செல்வோருக்கு விழிப்புணர்வு பயிலரங்கம்

அருப்புக்கோட்டை, டிச.13: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில்  வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கான சிறப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சந்திரா தலைமை வகித்தார். தாசில்தார் பழனிச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் ரமணன் ஆகியோர் கலந்து கொண்டு வெளிநாடு வேலைக்கு செல்ல விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து பேசினர்.  அதில் வெளிநாட்டில் பணிக்கு செல்ல விரும்புவோர் தாம் விரும்பும் பணியை தேர்வு செய்வதில் தொடங்கி அங்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், மற்ற நாடுகளின் சட்டதிட்டங்கள், கலாச்சாரங்கள், காப்பீட்டுத் திட்டங்கள், அரசாங்க உதவிகள், மேலும் வெளிநாட்டில் பணிபுரியும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கி பேசினர்.

Related Stories: