முதியவரிடம் 1 கிலோ கஞ்சா பறிமுதல் சிவகாசி, டிச. 13: சிவகாசியில் கஞ்சா விற்பனை

செய்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். சிவகாசி அருகே சாட்சியாபுரம்  பகுதியில் சிவகாசி டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பையுடன் நின்றவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் பெயர் கோபிகுமார்(65) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போலீசார் அதில் 1 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் கோபிகுமாரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: