ஊட்டி, டிச.13: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தி.மு.க. வினருக்கு உதவிடும் வகையில் வழக்கறிஞர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு உதவிடும் வகையில், வேட்பு மனு பூர்த்தி செய்வது முதல், வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் வரையில் எழும் அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வக்கீல்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள ஊட்டி வடக்கு, தெற்கு, கூடலூர், பந்தலூர், குன்னூர், மேலூர், கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி ஆகிய ஒன்றிய பகுதிகளில் பணியாற்ற தி.மு.க. வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஆனந்தன் மாவட்ட அலுவலகத்திலிருந்து ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வார். எனவே, தி.மு.க. சார்பில் போட்டியிலும் வேட்பாளர்கள், நிர்வாகிகள் இவர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஊட்டி வடக்கு ஒன்றியத்தில் செல்வராஜ் 94421 08884, தினேஷ்குமார் 94435 23102, சசிகுமார் 94430 06336, காமேஸ்வரன் 88258 76532, ரூபக் 90805 62594 ஆகியோர் வேட்பாளர்களுக்கு உதவி செய்வார்கள். தெற்கு ஒன்றியத்தில் செந்தில்குமார் 94434 05678, சசிகுமார் 94435 85588, கார்த்திக் 98655 33538, சந்திரபோஸ் 94430 03580, ஸ்ரீதர் 94435 29055 ஆகியோர் வேட்பாளர்களுக்கு உதவி செய்வார்கள்.