நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி, டிச. 13: தூத்துக்குடி அருகே  நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். தூத்துக்குடி   திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வாசகம். இவரது மகன்கள் மதன் (24), ஆனந்த் (22),  அசோக்  (20). மீனவர்கள். நேற்று முன்தினம்   திரேஸ்புரத்தில்  இருந்து பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றபோதும் பின்னர் கரைதிரும்வில்லை.

இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல்  தெரிவித்த சக மீனவர்கள், நேற்று காலை 5   படகுகளில் கடலுக்குள் சென்று  தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் இருந்து சுமார் 5  நாட்டிகல் மைல் தொலைவில் படகின்   இன்ஜின் பழுதான நிலையில் நடுக்கடலில் தவித்துகொண்டிருந்த 3 மீனவர்களையும் படகுடன் பத்திரமாக மீட்டு கரைக்கு  அழைத்து வந்தனர்.

Related Stories: