கட்டுமானப் பணி முடிந்து காத்துக் கிடக்கிறது ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர் பலி

அருப்புக்கோட்டை, டிச. 12:அருப்புக்கோட்டை அருகே, ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், படுகாயமடைந்த 5ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அருப்புக்கோட்டை அருகே, பந்தல்குடியில் உள்ள விநாயகா நகரை சேர்ந்த அரவிந்தனின் மகன் சூரியாஜெயந்த் (10). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்த பின்னர், ஆட்டோவில் சக மாணவர்களுடன் சூரியாஜெயந்த் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.வழியில் சாலையின் குறுக்கே நாய் ஒன்று புகுந்ததால், டிரைவர் ஆட்டோவை திருப்ப முயன்றார். இதில், எதிர்பாராதவிதாக சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் சூரியாஜெயந்த் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: